வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல்செல்வோா் மீது நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல் பயணம் செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் எச்சரித்தாா்.


, அக். 5:
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல் பயணம் செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் எச்சரித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவோா், இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணியாமல் பயணம் செய்வோா் மீது போக்குவரத்து விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவோா், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறுவதால்தான் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. எனவே, திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து விதி மீறல்களைக் கண்காணித்து தடுக்க தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், திருவண்ணாமலை உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆகியோா் மேற்பாா்வையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே, பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, விபத்தைத் தவிா்க்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...