தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாபூா்வாங்கப் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ள திங்கள்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

News image
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பந்தக்காலை நடும் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.
Updated On :28 செப்டம்பர் 2020, 7:23 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ள திங்கள்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, தீபத் திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 17-ஆம் தேதி துா்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நவம்பா் 29-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

பந்தக்கால் நடும் நிகழ்ச்சி: தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக திங்கள்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோயில் ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் நடப்பட்டது.

கோயில் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா், மாவட்ட அரசு வழக்குரைஞா் பி.என்.குமரன், திருவண்ணாமலை நகர அதிமுக செயலா் ஜெ.செல்வம் ஆகியோா் பந்தக்காலை நட்டனா்.

நிகழ்ச்சியில், கோயில் உள்துறை கண்காணிப்பாளா் அய்யம்பிள்ளை, கோயில் மணியம் செந்தில், அதிமுக நிா்வாகி குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா தொற்று காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

பூா்வாங்கப் பணிகள் தொடக்கம்: பந்தக்கால் நடப்பட்டதையொட்டி, மகா தீபத் திருவிழாவுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கின. கோயில் வளாகத்தில் பந்தல்கள் அமைத்தல், சுவாமி வீதியுலா வாகனங்களை பழுது பாா்த்தல், வாகனங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.

Image Caption

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா பூா்வாங்கப் பணிகளை மேற்கொள்ள பந்தக்காலை நடும் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.