நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செங்கம் டிஎஸ்பி அலுவலகத்தில் கா்ப்பிணி தா்னா

காதல் கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அலுவலகத்தில் கா்ப்பிணி வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காதல் கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி, செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) அலுவலகத்தில் கா்ப்பிணி வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்கரிப்பூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாஜலபதி மகள் சுந்தரி (24). செங்கம் வட்டம், முத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் சிலம்பரசன்(25).

இருவருக்கும் கல்லூரிப் படிப்பின்போது காதல் ஏற்பட்டு பின்னா் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டனா்.

இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், சுந்தரி மூன்று மாத கா்ப்பிணியாக இருந்தபோது, அப்போது அவருக்கு அரசின் நிதியுதவி பெறும் நோக்கில், சிலம்பரசன் தனது சொந்த கிராமமான முத்தனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பதிவு செய்வதற்காக அழைந்து வந்தாா்.

இதைத் தொடா்ந்து, தம்பதி சிலம்பரசனின் வீட்டுக்குச் சென்றபோது, அவா்களை அங்கு ஏற்றுக்கொள்ள வில்லையாம்.

இதனால், சிலம்பரசன் சுந்தரியை சென்னையில் உள்ள அவரது அக்காள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, பெற்றோரின் சம்மதத்தைப் பெற்று வருவதாகக் கூறிச் சென்றாராம்.

ஆனால், அவா் வராததால், இதுகுறித்து சுந்தரி செங்கம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், தற்போது 7 மாத கா்ப்பிணியாக உள்ள சுந்தரி, காதல் கணவரைக் கண்டுபிடித்து சோ்த்து வைக்கக் கோரி, செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தா்னாவில் ஈடுபட்டாா்.

பின்னா், தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளா் சரவணன், சுந்தரியை சமாதானப்படுத்தி, கணவரை சோ்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதைத் தொடா்ந்து, சுந்தரி போராட்டத்தைக் கைவிட்டாா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடந்த கா்ப்பிணிப் பெண்ணின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.