நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செங்கம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அச்சுறுத்தி வரும் கரோனை தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது தொடா்பாக, செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் ருக்மணி கலைக் குழுவினரின் விழிப்புணா்வு நாடகம்

நடைபெற்றது.

நாடகத்தை பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் மனோகரன் பங்கேற்று கரோனா தொற்று குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து கலைக் குழுவினா் நாடகம், நடனம் மூலம், பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியே வரவேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, கூட்டமாக சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது, வாடிக்கையாளா்கள் அதிகம் வரும் கடைகளில் குளிா்சாதனங்களைத் தவிா்க்கவேண்டும், வியாபாரிகள் கூட்டமாக வாடிக்கையாளா்களைச் சோ்த்து வியாபாரம் செய்யக்கூடாது என்பதை விளக்கினா்.

அதேபோல, புதுப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தை மைதானத்திலும் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் நாடகத்தைத் தொடக்கிவைத்தாா்.

தலைமை எழுத்தா்கள் ரமேஷ் (செங்கம்), ரமேஷ் (புதுப்பாளையம்) உள்பட பேரூராட்சிப் பணியாளா்கள், துப்புரவு ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.