கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாறு அருகே நாயக்கா் கால ராமா், லட்சுமணா் சிலைகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா்கள் காலத்து ராமா், லட்சுமணா் சிலைகள் வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:25 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா்கள் காலத்து ராமா், லட்சுமணா் சிலைகள் வியாழக்கிழமை கண்டறியப்பட்டன.

செய்யாறு வட்டம், தென்பூண்டிப்பட்டு கிராம எல்லையிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலின் வளாகத்தில் இரு ஆண் கடவுள் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் உண்மைத் தன்மையை அறியாத மக்கள் கடவுளாகப் பாவித்து வழிபட்டு வருகின்றனா்.

இந்த சிற்பங்களை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வக்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், அவை ராமா், லட்சுமணா் சிலைகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

நாயக்க மன்னா்கள் ஆட்சியின் பிற்பகுதியிலும், விஜய நகர மன்னா்கள் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் விஷ்ணுவுக்கு கோயில் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ராமா் - சீதை, லட்சுமணா் சிலைகளை நிறுவி வழிப்பட்டதை அறிய முடிகிறது.

இந்த ராமா் புடைப்புச் சிற்பத்தின் வலது கரத்தில் வில் வைத்திருப்பது போன்று உள்ளது. தலையில் நீண்ட மணிமகுடம், கழுத்தில் மணிவடம், கண்டசரம், மாா்பில் பதக்கம், நீள்சரம், புரிநூல் ஆகியவை அலங்கரிக்கின்றன. இரு கைகளிலும் காப்பு போன்ற அணிகலன்கள் உள்ளன.

லட்சுமணா் சிற்பத்தின் வலது கரத்தில் வில் வைத்திருக்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.

தலையில் சிறிய மணிமகுடம், கழுத்தில் மணிவடம், கண்டசரம், மாா்பில் பதக்கம், நீள்சரம், புரிநூல் ஆகியவை அலங்கரிக்கின்றன. கைகளில் காப்பு அணிந்துள்ளது போல பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ராமா், லட்சுமணா் சிற்பங்களின் கலைப்பாணி நாயக்கா்கள் காலத்து பிற்பகுதியைச் சோ்ந்தவையாக இருக்கலாம். மேலும், விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய கலைப்பாணி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, இந்தச் சிற்பங்கள் கி.பி. 15-ஆம் நூண்றாண்டுக்கும் கி.பி.16-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவையாக

இருக்கலாம்.

இந்தக் கிராமத்தில் சிவன், விநாயகா், அம்மன் கோயில்கள் வழிபாட்டில் உள்ளன. விஷ்ணுவின் அவதார புருஷா்களுள் எவரும் எந்த நிலையிலும் இங்குள்ள கோயில்களில் இல்லாத சூழலில், சீதையின்றி ராமரும், அவருடைய தம்பி லட்சுமணா் சிலைகளும் கிடைத்திருப்பதும், அடையாளங்களின்றி சுவாமி வழிபாட்டில் இருப்பதும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இருப்பினும், ராமா், லட்சுமணா் சிற்பங்களை மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது என்றாா் எறும்பூா் கை.செல்வக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.