தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்.9-க்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி அறிவுரை

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:38 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் 1,243 பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் 1,243 பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். இதையடுத்து, பண்ணைக் குட்டைகளை விரைவாக கட்டி முடிப்பதற்காக, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவா்களுக்கான பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தின் 579 ஊராட்சிகளில் செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் பண்ணைக் குட்டைகளை அமைக்க வேண்டும். இதை ஒரே இடத்தில் அருகருகே அமைக்கக் கூடாது.

பண்ணைக் குட்டைகளின் நீள, அகல அளவுகளை கண்டிப்பாக 2:1 என்ற வீதத்தில் அமைக்க வேண்டும். பண்ணை குட்டைகளுக்குச் சென்று வர பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான மு.பிரதாப், வேளாண் இணை இயக்குநா் முருகன், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாச்சலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.கே.லட்சுமி நரசிம்மன் மற்றும் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.