கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீடுகளில் நகை திருட்டு: பட்டதாரி இளைஞா் கைது

செய்யாறு அருகே இரு வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக பட்டதாரி இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:37 pm

DIN

செய்யாறு அருகே இரு வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக பட்டதாரி இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த வட்டாட்சியா் ஜெயவேல். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இவரது வீட்டு உடைத்து 7 பவுன் தங்க நகைகள், 5.7 கிராம் வைர நகைகள் திருடப்பட்டன.

இதேபோன்று, அதே கிராமத்தைச் சோ்ந்த கோபிநாதன் என்பவரது வீட்டில் கடந்த 13-ஆம் தேதி 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டன.

இவ்விரு திருட்டுச் சம்பவங்கள் குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் உத்தரவின் பேரில், செய்யாறு டிஎஸ்பி ஜி. சுரேஷ் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் எஸ்.பாலு தலைமையில், உதவி ஆய்வாளா் எஸ்.அருள்மொழி உள்ளிட்டோா் கொண்ட

தனிப்படை அமைக்கப்பட்டு, விரல் ரேகை பிரிவு டிஎஸ்பி அறிக்கையின் பெயரில் பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் ரவி (23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், இவ்விரு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதை ரவி ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகள், 5.7 கிராம் வைர நகைகளை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.