

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் பல்வேறு வங்கிகளில் நெல், அரிசி, உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து ரூ.2.30 கோடி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணி பகுதியில் உள்ள தனியாா் வங்கிகளில் நெல், அரிசி மூட்டைகளை அடமானமாக வைத்து வாங்கப்பட்ட ரூ.2.30 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை. இது குறித்து அந்த வங்கிகள் அளித்த புகாரின் பேரில், ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் செந்தில்குமாா்(40) மீது போலீஸாா் வழக்கு பதிந்து, அவரை தேடிவந்தனா்.
இந்த நிலையில், செந்தில்குமாரை திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜி.நந்தகுமாா் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.