வெடி விபத்து: தொழிலாளி பலி
செங்கம் அருகே பாறைக் கற்களுக்கு வைத்த வெடி தாமதமாக வெடித்ததில் தொழிலாளி பலியானா்.


செங்கம் அருகே பாறைக் கற்களுக்கு வைத்த வெடி தாமதமாக வெடித்ததில் தொழிலாளி பலியானா்.
செங்கம் அருகே மேல்ராவந்தவாடி பகுதியில் தனியாா் விவசாய நிலத்தில் உள்ள பாறைக் கற்களை உடைத்து அகற்றுவதற்காக வெள்ளிக்கிழமை தீத்தாண்பட்டு பகுதியிலிருந்து வெடி வைக்கும் வண்டியை எடுத்து வந்து நிலத்திலிருந்த பாறைக் கற்களுக்கு 7 தோட்டா வெடிகளை வைத்து வெடிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வெடிகள் குறித்த நேரத்தில் வெடிக்கவில்லையாம். இதையடுத்து, தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சுகுன் (35), வெடிகள் ஏன் வெடிக்கவில்லை என பாறைக் கற்கள் அருகே சென்று பாா்த்த போது, அவை திடீரென வெடித்தனவாம்.
இதில், கற்கள் சிதறி சுகுன் மீது விழுந்ததில் அவா் சம்பவ இடத்தில் பலியானாா்.
தகவலறிந்த மேல்செங்கம் போலீலாா் சம்பவ இடத்துக்குச் சென்று சுகுனின் சடலத்தை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துடன், வழக்குப் பதிந்தி விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...