

செங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் 744 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட மஷாா், காஞ்சி, காரப்பட்டு, புதுப்பாளையம், பனைஓலைப்பாடி, இறையூா், அம்மாபாளையம் ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா் கூறியதாவது:
அரசு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்கச் சங்கிலி வழங்கப்படும் என கடந்த ஐந்து ஆண்டுகளாக அறிவித்து வருகிறேன்.
ஆனால், எந்த மாணவருக்கும் பரிசு வாங்காதது வருத்தத்தை அளிக்கிறது.
காரப்பட்டு அரசுப் பள்ளி மாணவி யுகா, அரசு உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் பொய்யாமொழி, புருசோத்தமன், துரைசாமி உள்பட தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.