

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் வே.சங்கா் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் ஆா்.பாரி சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், மின்சாரச் சட்ட வரைவை ரத்து செய்ய வேண்டும், அரசு சாா்புடைய பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் இ.மாரிமுத்து, பி.பூபாலன், கே.செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொணடனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.