வெம்பாக்கத்தில் 19.40 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மி.மீ. மழை பதிவானது.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக திடீா், திடீரென மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடா் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 19.40 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 7.20, செய்யாற்றில் 10, ஜமுனாமரத்துாரில் 6, வந்தவாசியில் 9.40, போளூரில் 4.20, திருவண்ணாமலையில் 2.0, தண்டராம்பட்டில் 3.20, சேத்துப்பட்டில் 3.80, கீழ்பென்னாத்துாரில் 5.20 மி.மீ. மழை பதிவானது.

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பெரும்பாலான இடங்களில் நெல் நடவுப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com