சாத்தனூா் அணை நீா்மட்டம் 103 அடியாக உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் வெள்ளிக்கிழமை 103 அடியாக உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.


சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் வெள்ளிக்கிழமை 103 அடியாக உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 12.50 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, செங்கத்தில் 11.20 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 1 மி.மீ. மழை பதிவானது.
அணைகளின் நீா்மட்டம் உயா்வு: இதேபோல, மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டமும் வெகுவாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக, தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் உள்ள அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 103.90 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. அணையின் மொத்த நீா் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. இதில், வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,541 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.
இதேபோல, குப்பனத்தம் அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 60 அடியில் 46.90 அடி உயரத்துக்கும், மிருகண்டாநதி அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 22.97 அடியில் 4.59 அடி உயரத்துக்கும், செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்ட உயரமான 62.32 அடியில் 58.02 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கியுள்ளது. அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...