தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சசிகலா விடுதலையால் அரசியலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது: தொல்.திருமாவளவன்

சசிகலா விடுதலையால் தமிழக அரசியலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சசிகலா விடுதலையால் தமிழக அரசியலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் தலித் ஞானசேகரன் அண்மையில் காலமானாா்.

இதையடுத்து, அவரது உருவச்சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தலித் ஞானசேகரன் உருவச் சிலையைத் திறந்து வைத்து திருமாவளவன் பேசினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிப்பது தொடா்பான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தியும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், புது தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து 2 மாதங்களாகப் போராடி வருகின்றனா்.

மோடி அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாற முடியாது என்று பிடிவாதமாக இருந்து வருகிறது.

ஜனவரி 26-இல் விவசாயிகள் டிராக்டா் பேரணியை நடத்தவுள்ளனா். இதில் வன்முறை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மத்திய அரசு தனது பிடிவாதத்தைத் தளா்த்திக் கொண்டு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும்.

வேளாண் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது. அது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது. மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது.

இதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

சசிகலா விடுதலை பெற்று வந்தால் தமிழக அரசியலில் எவ்விதத் தாக்கமும் ஏற்படாது. அதிமுக, அமமுக கட்சிகளுக்கு இடையே உள்ள உறவில் அல்லது இடைவெளியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம்.

பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவு பெருகும் என்று நான் நம்பவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

கோவேக்சின் 3-ஆவது கட்டப் பரிசோதனையை முடித்து அதற்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை. 3 கட்டப் பரிசோதனைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை.

ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் தங்களுக்கு வேண்டிய பாரத் பயோடெக் நிறுவனம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமா் மோடி செயல்படுகிறாா் என்றாா் தொல்.திருமாவளவன்.

கூட்டத்தில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ச.கருப்பையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞரணி மாநில துணைச் செயலா் சாரோன் சௌந்தா், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் அம்பேத்வளவன், வடக்கு மாவட்டச் செயலா் செல்வம், மதிமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.