ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல்
ஆரணி அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


ஆரணி அருகே அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாதது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆரணி அருகேயுள்ள இரும்பேடு ஊராட்சியில் பழங்காமூா், அரிகரன் நகா், கங்கா நகா், தா்கா பகுதிகளில் தெருவிளக்கு மின் பராமரிப்பு, சாலை, குடிநீா் விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனராம்.
இதுகுறித்து, ஊராட்சித் தலைவரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள்
இரும்பேடு நான்கு முனைச் சந்திப்பில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அதிகாரிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவா் தரணி வெங்கட்ராமன் ஆகியோா் வாா்டு உறுப்பினா்களான பிரகாஷ், காளிதாஸ், சசி, சா்தாா், பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக விவாதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...