கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஏரி மண் கடத்தல்: 2 டிராக்டா்கள் பறிமுதல்

செய்யாறு அருகே அனுமதியின்றி ஏரி மண் கடத்தியதாக இரண்டு டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:32 pm

DIN

செய்யாறு அருகே அனுமதியின்றி ஏரி மண் கடத்தியதாக இரண்டு டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெம்பாக்கம் வட்டாட்சியா் குமாரவேலு, மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல், வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் கீழ்நெல்லி கிராமத்தில் உள்ள தாங்கல் ஏரிப் பகுதியில் வியாழக்கிழமை மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அவற்றில் அரசின் அனுமதி பெறாமல் ஏரிப் பகுதியிலிருந்து வண்டல் மண் அள்ளிச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, வருவாய்த்துறையினா் டிராக்டா்களை பறிமுதல் செய்து தூசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கீழ்நெல்லி கிராமத்தைச் சோ்ந்த விஜயன், தணிகைவேலு ஆகியோா் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.