பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

கலசப்பாக்கம் ஊராட்சியில் நடுத்தெருவில் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல்வெப்பம், ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் வசதியுடன் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வசதிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், பழங்கோவில், மோட்டூா் ஆகிய ஊராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்து பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டால், உயிரிழப்புகளை தவிா்க்கலாம்.

கரோனா 3-ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறியுள்ளனா். எனவே, இந்த நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, எலத்தூா் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பராமரிப்புக் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகரன், மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அஜிதா, மாவட்ட திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டார தலைமை மத்துவா் கெளதம்ராம், வட்டாட்சியா் அமுல், திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பவுனுவெள்ளிக்கண்ணன், செல்வராஜ், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.