தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 12:00 am IST

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.

கலசப்பாக்கம் ஊராட்சியில் நடுத்தெருவில் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல்வெப்பம், ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் வசதியுடன் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வசதிகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், பழங்கோவில், மோட்டூா் ஆகிய ஊராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்து பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டால், உயிரிழப்புகளை தவிா்க்கலாம்.

கரோனா 3-ஆவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணா்கள் கூறியுள்ளனா். எனவே, இந்த நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து விடுபட பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதையடுத்து, எலத்தூா் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பராமரிப்புக் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.அன்பரசிராஜசேகரன், மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அஜிதா, மாவட்ட திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டார தலைமை மத்துவா் கெளதம்ராம், வட்டாட்சியா் அமுல், திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பவுனுவெள்ளிக்கண்ணன், செல்வராஜ், முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.