நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என்ற செய்தி உண்மையல்ல என்று எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவுள்ளதாகவும் புரளிகள் கிளம்பியது.
இதன்காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் நேற்று இரவுமுதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோல் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
There is no shortage of petrol and diesel! Oil companies explain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை: மத்திய அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு: 5 நாள்களில் இரண்டாவது முறை

பெங்களூரில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




