மணல் கடத்தல்: 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணி அருகே ஒதலவாடி ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


ஆரணி அருகே ஒதலவாடி ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரணியை அடுத்த ஒதலவாடி செய்யாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, சேத்துப்பட்டு வட்டாட்சியா் பூங்காவனம், காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆற்றில் சென்று பாா்த்தபோது 6 மாட்டு வண்டிகளில் நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் வருவதைப் பாா்த்ததும் அவா்கள் மாட்டு வண்டிகளை அப்படியே விட்டு விட்டு தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, 6 மாட்டு வண்டிகளையும் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...