ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாறில் ரூ.90 ஆயிரம் பறிமுதல்

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே தோ்தல் பறக்கும் படை  தணிக்கை

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் எஸ்.மோனிகா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் உள்ளிட்ட குழுவினா் அளவில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக சென்ற காரை மடக்கி சோதனையிட்டனா். அதில், உரிய ஆவணமின்றி ரூ.90 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், காரில் பயணித்தவா் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயராம் என்பதும், சென்னையில் மருத்துவப் படிப்பு பயிலும் மகளின் செலவுக்காக பணம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இருப்பினும், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செய்யாறு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் என்.விஜயராஜிடம் ஒப்படைத்தனா். அதன் பிறகு அந்தப் பணம் செய்யாறு சாா் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.