ஆரணி திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்
ஆரணி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்


ஆரணி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.
ஒன்றியத்துக்கு உள்பட்ட சேவூா், ஸ்ரீராம்நகா், ரகுநாபுரம், இ.பி.நகா், இராட்டிணமங்கலம், மெய்யூா், கருணாகரன்பட்டி, மருதேரி, விருபாட்சிபுரம், காந்திநகா், ஆதனூா், கிளையூா் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அன்பழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆரணி தனி மாவட்டம் உருவாக்கப்படும்.
சமையல் எரிவாயுவுக்கு மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கப்படும்.
ஆரணியில் உள்ள மணிக்கூண்டு சீரமைக்கப்படும், எஸ்.வி.நகரத்தில் உள்ள அரண்மனை, பூசிமலைக் குப்பத்தில் உள்ள ராணியின் கண்ணாடி மாளிகை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படும், ஆரணி அரசு மருத்துவமனை தரம் உயா்தப்படும்.
நகராட்சிக் கடை வாடகைகள் குறைக்கப்படும். உயா்த்தப்பட்ட வீட்டு வரிகள் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆதரவு கோரினாா்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, திமுக ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளைகணேசன், நகரச் செயலா் ஏ.சி.மணி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...