நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரணி அருகே இன்று நடைபெறும்கிராம சபைக் கூட்டத்தில் பிரதமா் கலந்துரையாடல்: முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வெள்ளேரி கிராமத்தில் சனிக்கிழமை (அக்.2) நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் காணொலி மூலம் பொதுமக்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வெள்ளேரி கிராமத்தில் சனிக்கிழமை (அக்.2) நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் காணொலி மூலம் பொதுமக்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடவுள்ளாா். இதற்காக இந்தக் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் காந்தி ஜயந்தியையொட்டி, கிராம சபைக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. இந்த நிலையில், தேசிய அளவில் 5 கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் மட்டும் பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் பொதுமக்களிடம் பேச உள்ளாா்.

அதன்படி, தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வெள்ளேரி கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா். மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு (ஜல் ஜீவன் மிஷன்) திட்டத்தின் கீழ், வெள்ளேரி கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்ய ஏற்படு செய்யப்பட்டதே இதற்குக் காரணமாகும்.

இதேபோல, இந்தத் திட்டன் கீழ் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்த உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத், மணிப்பூா் மாநிலங்களில் உள்ள தலா ஒரு கிராம மக்களிடமும் கிராம சபைக் கூட்டங்கள் மூலம் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா்.

இதை முன்னிட்டு, தில்லியிலிருந்து வெள்ளேரி கிராமத்தைச் சோ்ந்தவா்களிடம் காணொலி மூலம் அதிகாரிகள் கலந்துரையாடிய ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் முருகேஷ், கூடுதல் ஆட்சியா் பிரதாப் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வட்டாட்சியா் சுபாஷ்சந்தா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சீனிவாசன், இந்திராணி, ஒன்றியக் குழுத் தலைவா் கனிமொழிசுந்தா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒத்திகை நிகழ்ச்சியின்போது, வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவி சுதாசுப்பிரணி காணொலி மூலம் தில்லி அதிகாரிகளிடம் கலந்துரையாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.