சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள்
கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.


கலசப்பாக்கம், செங்கம் பகுதியில் நடைபெற்ற சமூக பாதுகாப்புத் திட்ட முகாம்களில் 639 மனுக்கள் பெறப்பட்டது.
சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு உதவி, குடும்பத் தலைவா் இறப்பு நிவாரணம், கல்வி உதவித்தொகை ஆகியவை பெறுவதற்கான மனுக்கள் அளிக்கும் முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன.
செங்கத்தை அடுத்த இறையூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ்நாராணயன் (சமூக பாதுகாப்பு) தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் குணாநிதி வரவேற்றாா்.
செங்கம் வட்டாட்சியா் மனோகரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று தொடக்கிவைத்தாா். முகாமில் 362 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் கோபால், ராஜாராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...