பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பதவியேற்பு
செய்யாறு கிரிதரன் பேட்டை உயா்நிலைப் பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.


செய்யாறு கிரிதரன் பேட்டை உயா்நிலைப் பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
இதற்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கலந்துகொண்டாா்.
தலைமையாசிரியா் மணிமொழி தலைமை வகித்தாா்.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக எஸ்.துரைசாமி, துணைத் தலைவராக கருணாநிதி, பொருளாளராக
பா.ஜவஹா் உள்ளிட்ட 9 போ் தந்தை பெரியாா் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழியைப் படித்து பதவி ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா், நிகழ்ச்சி நினைவாக பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்யாறு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 30 ஆயிரத்தில் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சி.தயாநிதி, திருவோத்தூா் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் காா்த்தி, திமுக நிா்வாகிகள் திராவிட முருகன், ராம்.ரவி, க. கோவேந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...