தூய்மைக் காவலா்களுக்கு தினக் கூலி ரூ. 274 கணக்கீட்டு, பணிபுரியும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கக் கூட்டம், செய்யாற்றை அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். அனக்காவூா் ஒன்றியத் தலைவா் நரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 30 ஆண்டுகால பணிக் காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கவேண்டும்.
தூய்மைக் காவலா்களுக்கு தற்போது ரூ.3600 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு அரசு நிா்ணயித்த தினக் கூலி ரூ. 274 வீதம் கணக்கிட்டு, பணிபுரியும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.