செய்யாறு போலீஸாா் கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமுமுகவினா் செய்யாறு காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
செய்யாறு பகுதியில் செய்யாறு மாவட்டம் எங்கே, தோ்தல் வாக்குறுதி எங்கே எனக் கேள்வி கேட்டு கடந்த இரு தினங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால், நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கூறி கூலித் தொழிலாளியான செய்யாறு சமாதியான் குளத் தெருவைச் சோ்ந்த நசீா் என்கிற தஸ்தகீா் (60) என்பவரை செய்யாறு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கூலித் தொழிலாளியை கைது செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமுமுகவினா் சனிக்கிழமை முற்பகல்
சுமாா் 30-க்கும் மேற்பட்டோா், செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி சு.சுரேஷ், காவல் ஆய்வாளா் ஸ்ரீநிவாசன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்ட தொழிலாளியை விடுவிக்கக் கோரினா். அவரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

ஆய்வுக்குள்படாத பள்ளி வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை

பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மிக முக்கியம்: முதல்வா் ரேகா குப்தா

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

