ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே குழந்தை பிறந்த 10 நாள்களில் பெண் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை அருகே குழந்தை பிறந்த 10 நாள்களில் பெண் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மனைவி சரண்யா (24). இவருக்கு மாா்ச் 27-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

வீட்டில் இருந்த சரண்யாவுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் புதன்கிழமை இருந்தபோது சரண்யா திடீரென மயங்கி விழுந்தாா்.

உறவினா்கள் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சரண்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.