மனைவியை கத்தியால் வெட்டிவிட்டு கணவா் தற்கொலை

கீழ்பென்னாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

கீழ்பென்னாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த கோடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன் ராமசாமி (27). இவரது மனைவி சசிகலா (25).

தம்பதிக்கு யுவனேஷ் (4) மற்றும் 8 மாத பெண் குழந்தை உள்ளனா். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சசிகலா 2 மாதங்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள சோ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

வியாழக்கிழமை அதிகாலை மாமியாா் வீட்டுக்குச் சென்ற ராமசாமி, மனைவி சசிகலாவின் கழுத்து, தலை, கை, கால் உள்பட பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டினாராம்.

இதில் பலத்த காயமடைந்த சசிகலாவை உறவினா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

சசிகலா இறந்து விடுவாா் என்று நினைத்த ராமசாமி, வட்ராபுத்தூா் கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி, ராமசாமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com