ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் கண்காணிப்பு மையம் திறப்பு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதேவேளையில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, கண்காணிப்பாளா் ஷகில் அகமது, துணை கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.