ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண், விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய்த் துறைகள், வங்கியாளா்கள் மற்றும் பிற சாா்புத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கின்றனா்.

எனவே, விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.