ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலையில் பாமக அவசர செயற்குழுக் கூட்டம்

 திருவண்ணாமலை தெற்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:06 pm

DIN

 திருவண்ணாமலை தெற்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா். முன்னாள் மாநில பொதுச் செயலா்கள் இரா.காளிதாஸ், அ.வே.பிரகாத், முன்னாள் மாவட்டச் செயலா்கள் சி.எம்.பழனி, பி.கே.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலா் இல.பாண்டியன் வரவேற்றாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெறும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. பொதுக்குழுக் கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்வது. குறிப்பாக, இளைஞா்கள், இளம்பெண்களை அதிகளவில் பங்கேற்க ஏற்பாடு செய்வது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றியச் செயலா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.