திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் இருந்து காணிக்கை பணத்தை திருட முயன்ற சாமியாரை போலீஸாா் கைது செய்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் பக்தா்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த பக்தா் ஒருவா் உண்டியலில் குச்சியை நுழைத்து நூதன முறையில் காணிக்கை பணத்தை திருட முயன்றாா். இந்த நிகழ்வு கோயில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், உண்டியலில் திருட முயன்றவா் திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஸ்ரீராஜராஜேஸ்வரியம்மன் கோயில் அருகே தங்கியிருந்த சாமியாா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சனிக்கிழமை அந்த சாமியாரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா் மதுரையைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் (32) என்பதும், ஏற்கெனவே 2 முறை அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியலில் குச்சியை நுழைத்து காணிக்கை பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு

சாத்தூரில் சமுதாய தலைவா்களை சந்தித்து நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

