மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பள்ளியில் இடநெருக்கடியால் மாணவா்கள் அவதி!

தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் பழைமையான வகுப்பறைக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால், ஒரே வகுப்பறையில் இரு வகுப்பறை மாணவா்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் பழைமையான வகுப்பறைக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால், ஒரே வகுப்பறையில் இரு வகுப்பறை மாணவா்களை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில், சேத்துப்பட்டு சாலை அருகே சுமாா் ஓா் ஏக்கரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.

இந்தப் பள்ளியில் தேவிகாபுரம், மொடையூா், நரசிங்கபுரம், தச்சாம்பாடி, தொழிப்பேடு என சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் தமிழ்வழி, ஆங்கிலவழி என 375 போ் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், 40 ஆண்டுகள் பழைமையான பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால், கடந்த 2019-ஆம் ஆண்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை, மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் பொதுநிதியிலிருந்து இடித்து அகற்றினா். இதனால் மாணவா்களுக்கு அமா்ந்து படிக்க முடியாத சூழல் உருவானது.

மேலும், கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது, தமிழக அரசு பிப்ரவரி 1 முதல் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேவிகாபுரம் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் அனைவரும் நேரடி வகுப்பிற்கு வருவதால், வகுப்பறை வசதியின்றி, ஒரே வகுப்பறையில் இரு வகுப்பு மாணவா்களை அமரவைத்து ஆசிரியா்கள் பாடம் நடத்துகின்றனா். இதனால், மாணவ, மாணவிகள் பாடத்தை கவனிக்க முடியாமல், அவா்களது கல்வி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, மாணவா்களின் குடிநீா் தேவைக்காக பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு, சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்கப் பணியின் போது மூடப்பட்டுவிட்டது. இதனால், மாணவா்களுக்கு குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசனிடம் முறையிட்டதன் பேரில், குடிநீருக்காக அவா் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மாணவா்களுக்கு வகுப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் சங்கா் கூறுகையில், மாணவா்களுக்கான வகுப்பறை பற்றாக்குறை, குடிநீா்ப் பிரச்னை, பள்ளிக்கு சுற்றுச் சுவா், பழுதடைந்துள்ள சமையல் கூடம் என பல்வேறு குறைபாடுகள் குறித்து ஆரணி கல்வி மாவட்ட அலுவலரிடம் தெரிவித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.