மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல் சூளைகளுக்காக பறிபோகும் கனிம, இயற்கை வளம்

போளூா் வட்டம், ஏந்தூவாம்பாடி ஊராட்சியில் செங்கல் சூளைகளுக்காக சட்டவிரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது; பச்சை மரங்கள் அழிக்கப்படுகின்றன.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:38 pm

 நமது நிருபர்

போளூா் வட்டம், ஏந்தூவாம்பாடி ஊராட்சியில் செங்கல் சூளைகளுக்காக சட்டவிரோதமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது; பச்சை மரங்கள் அழிக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்தில் அமைந்துள்ள ஏந்தூவாம்பாடி ஊராட்சி விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் திறந்த வெளிக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைத்து அரசின் இலவச மின்சாரம் மூலம் தங்களது நிலத்தில் நெல், கரும்பு,நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சில விவசாயிகள் சரிவர பயிரிடாததால் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன.

அப்பகுதியில் வசிக்கும் சில நபா்கள் தரிசு நிலங்களின் உரிமையாளா்களிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் செம்மண் எடுத்து வந்து குவித்து செங்கல் தயாரித்து விற்று வருகின்றனா்.

செம்மண் எடுக்க அரசின் அனுமதி பெறவேண்டும்.

ஆனால், இந்த நபா்கள் ஒரு யூனிட் செம்மண் ரூ.1,250-க்கு வாங்கி டிராக்டரில் கடத்தி வந்து குவியலாக கொட்டி வைத்துள்ளனா். மேலும், செங்கல் சூளைக்காக பச்சை மரங்களை அறுத்து காய வைத்துள்ளனா். இதனால் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது.

செங்கல் சூளை கொளுத்தும் போது அப்பகுதி புகை மண்டலமாக மாறி சுற்றுசூழல் மாசடைகிறது.

இதை சம்பந்தபட்ட அதிகாரிகள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குன்று மற்றும் சாகுபடி நடைபெறாத நிலங்களில் இருந்து செம்மண் எடுத்து வரப்படுகிறது. விவசாயப் பயன்பாட்டுக்கான இலவச மின்சாரம் செங்கல் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

செங்கல் சூளை நடத்த கனிம வளம், வருவாய்த் துறைகளிடம் முன்அனுமதி பெறவேண்டும். ஆனால், இங்கு இயங்கும் சூளைகள் அரசின் அனுமதி பெற்ாகத் தெரியவில்லை. சட்ட விரோதமாக செங்கல் சூளைகள் நடத்தப்படுகின்றன.

இதுபற்றி வருவாய், காவல், பொதுப் பணித் துறையினா் கண்டுகொள்வதில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.