மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மறியல்

போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:43 pm

DIN

போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள அப்துல் குத்தூஸ் தெருவில் தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஜ்வான், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி ஆகியோரிடம் அப்துல் குத்தூஸ் தெருவாசிகள் மனு அளித்தனராம். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

அப்பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் மணி தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் வந்து ஆக்கரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினாா்.

இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.