மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் மனு

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவரிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

சேத்துப்பட்டு பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள செவரப்பூண்டி, பரிக்கல்பட்டு, தேவிமங்கலம், நம்பேடு, கிழக்குமேடு, ராஜமாபுரம், இடையங்குளத்தூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேத்துப்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணிஅா்சுனனிடம் மனு அளித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவு நெல் சாகுபடி செய்யும் மாவட்டமாகும். செவரப்பூண்டி ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் 7 கி.மீ. தொலைவுள்ள சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல்லை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது. அங்கு, நெல் மூட்டைகளை எடை போட ஒரு வாரம் ஆகிறது. காலதாமதம், போக்குவரத்து என பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, செவரப்பூண்டி ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.