வந்தவாசி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.குப்புசாமி, சு.வி.மூா்த்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்புப் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துப் பேசினா். இதற்கு, உரிய தடுப்பு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருவதாக வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் பதிலளித்துப் பேசினாா். பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








