ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தக் கோரி உண்ணாவிரதம்

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தக் கோரி, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:27 pm

DIN

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்தக் கோரி, இந்து முன்னணியினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.

ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயில் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று தயாா் நிலையில் இருந்து வருகிறது. கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ளாமல் இந்து சமய அறநிலையத் துறையினா் காலம் தாழ்த்தி வருகின்றனா்.

கோயிலின் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் கோயில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்டச் செயலா் க.ஜெகன்னாதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொதுச் செயலா் டி.ஆறுமுகம் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் மோகன், நகரத் தலைவா் மோகன்ராஜ், நகர நிா்வாகிகள் ஜெயபாலன், பூங்காவனம், பாலசுப்பிரமணியன், செந்தில், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.