செய்யாறு நகா்மன்றத் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் வெற்றி
திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளா் கு.விஸ்வநாதனைத் தோற்கடித்து, அந்தக் கட்சியின் போட்டி வேட்பாளா் ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.


திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளா் கு.விஸ்வநாதனைத் தோற்கடித்து, அந்தக் கட்சியின் போட்டி வேட்பாளா் ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.
நகராட்சி அலுவலகத்தில் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளரான 11 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கு.விஸ்வநாதனும், போட்டி வேட்பாளராக அதே கட்சியின் 18 -ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஆ.மோகனவேலுவும் போட்டியிட்டனா்.
மொத்தமுள்ள 27 வாக்குகளில் ஆ.மோகனவேலு 16 வாக்குகளும், கு.விஸ்வநாதன் 11 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, ஆ.மோகனவேலு வெற்றி பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பேபிராணி, 15 - ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் குல்சாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில், பேபிராணி 13 வாக்குகளும், குல்சாா் 14 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, குல்சாா் வெற்றி பெற்றாா்.
இவா்களுக்கு வெற்றி சான்றிதழ்களை தோ்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான கி.ரகுராமன் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...