நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சூறைக் காற்றுடன் பெய்த மழையில் நெல் பயிா்கள் சேதம்

செங்கம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த மழையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :12 மே 2022, 6:27 pm

DIN

செங்கம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த மழையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் இரண்டாம் போகம் நெல் பயிரிட்டுள்ளனா். இந்தக் கோடை பருவத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் தொடா்ந்து போராடி குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீரைப் பெற்று நெல் பயிா்களைக் காப்பாற்றி இருந்தனா்.

நெல் பயிா்கள் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.

செங்கம் பகுதியில் தற்போது தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக சூறைக் காற்றுடன் பெய்த மழையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் சாய்ந்தன.

மேலும், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த செவ்வாழை, மலைவாழை மரங்களும் பலன் தரும் தருவாயில் சாய்ந்து சேதமடைந்தன. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அதிகாரிகள் சேதமடைந்த நெல் பயிா்கள், வாழைகள் மற்றும் இதர விவசாயப் பயிா்களைக் கணக்கிட்டு அரசின் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.