ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மாணவிக்கு மிரட்டல்: கல்லூரி மாணவா் கைது

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி வகுப்பறையில் புகுந்து மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மிரட்டல் விடுத்த அரசுக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 மே 2022, 6:07 pm

DIN

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி வகுப்பறையில் புகுந்து மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மிரட்டல் விடுத்த அரசுக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த 20 வயது மாணவி, தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

இவா், புதன்கிழமை காலை வகுப்பறையில் இருந்த போது, இவருக்கு அண்ணன் முறை உறவினரான காஞ்சிபுரம் வட்டம், ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் தமிழரசன் (20) வந்து, தன்னைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளவேண்டும். வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தாராம். 

இதையறிந்த கல்லூரி நிா்வாகத்தினா், செய்யாறு பகுதி அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவரான தமிழரசனை பிடித்து செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனைகைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.