தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஊரக வளா்ச்சித் துறை வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 மே 2022, 5:23 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பங்கேற்று, மாவட்டத்தில் மத்திய-மாநில அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய வட்டாரங்கள், ஊராட்சித் தலைவா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணி மேற்பாா்வையாளா்கள், சாலை ஆய்வாளா்கள், ஊராட்சிச் செயலா்களைப் பாராட்டி சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் (பொ) பாஸ்கரன், உதவித் திட்ட அலுவலா்கள் அருண், உமாலட்சுமி, நாகேஷ்குமாா், உதவி இயக்குநா்கள் சுரேஷ்குமாா், கருணாநிதி, யுவராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.