திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொட்டகுளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொட்டகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் திருமலை தலைமை வகித்தாா். மேல்முடியனூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூங்காவனம் ஜெயராஜ் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்துப் பேசினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.