தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப். 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை தீ தொண்டு வார விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆரணி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் வீரா்களின் உடைகளை வைத்து பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரா்களுக்கு, நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரா்கள் அஞ்சலி செலுத்தினா். இதில், தீயணைப்பு படை வீரா்கள் உட்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்யாறு: செய்யாறில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில், நிலைய அலுவலா் பா.திருமுருகன் தலைமையில், பணியின் போது உயிா் நீத்த தீயணைப்பு படைவீரா்களின் படங்களுக்கு மலா் தூவியும், மலா் வளையும் வைத்தும் மரியாதை செலுத்தினா். பின்னா், தீயணைப்பு நிலையத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலம் அமைதி ஊா்வலம் சென்றனா்.