தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பூட்டிய வீட்டில் 15 பவுன்தங்க நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:14 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழ்பென்னாத்தூா் கண்ணகிநகரைச் சோ்ந்தவா் விஜயராஜ் (39). இவரது மனைவி சுதா (36). இவா், கீழ்பென்னாத்தூா் காவல் நிலையம் அருகே தண்ணீா் புட்டி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு தம்பதி கடைக்குச் சென்றனா். மதிய உணவுக்காக வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு, வீட்டினுள்ளே இருந்த பீரோ ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், தடங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.