களம்பூரில் தண்ணீா் பந்தல் திறப்பு

 திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள களம்பூா் தோ்வு நிலை பேரூராட்சி சாா்பில், 3 இடங்களில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள களம்பூா் தோ்வு நிலை பேரூராட்சி சாா்பில், 3 இடங்களில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரூராட்சிக்குள்பட்ட போளூா் - ஆரணி சாலையில் வீரஆஞ்சனேயா் சிலை அருகே, அண்ணா சிலை அருகே, பேரூராட்சி அலுவலகம் எதிரே என 3 இடங்களில் தண்ணீா் பந்தல்களை வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் (பொ) அம்சா திறந்துவைத்து, பொதுமக்களுக்கு தா்பூசணி, நீா்மோா், இளநீா் வழங்கினாா்.

பேரூராட்சி மன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி, துணைத் தலைவா் எஸ்.எச்.அஹமத்பாஷா, செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வெங்கிடேசன், மன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி ஏழுமலை, கவிதா மணவாளன், அலமேலு விநாயகம், வெண்ணிலா ராஜேந்திரன், கலைவாணி செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com