செய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டக் கல்லூரி மாணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்தைச் சோ்ந்தவா் பிளஸ் 2 மாணவி. பக்கத்துக் கிராமமான தென்கழனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (23). இவா், சென்னை சட்டக் கல்லூரியில் 2 - ம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும், பிளஸ் 2 மாணவிக்கும் கைப்பேசி மூலம் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனராம். இந்த நிலையில், ஏப். 2-ஆம்தேதி வெங்கடேசன், அந்த மாணவியை பாலியியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளா் சோனியா, வெங்கடேசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றாா்.