ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

புதுப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் தொடக்கம்

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 10:30 pm

DIN

செங்கம் அருகே புதுப்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் தொடக்க விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன்(கலசப்பாக்கம்), மு.பெ.கிரி(செங்கம்), புதுப்பாளையம் ஓன்றிய குழுத் தலைவா் சுந்தரபாண்டின், பேரூராட்சி தலைவா் செல்வபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: பொதுமக்கள் தங்களது குறைகளை அதிகாரிகளை தேடிச் சென்று தெரிவிக்காமல் ஓரே இடத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளையும் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து 30 நாள்களில் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டமே ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம். இந்த திட்டத்தில் முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறாா். எனவே, இந்த திட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறவேண்டும் என்றாா்.

இதில், செங்கம் வட்டாட்சியா் முருகன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் ரேணுகா உள்ளிட்ட அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத்ரிஜ்வான் வரவேற்றாா். புதுப்பாளையம் பேரூராட்சி துணைத்தலைவா் மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.