வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நிதி நிறுவன உரிமையாளா் கடத்தல்: 6 போ் கைது

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 8:10 pm

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்திச் சென்ற புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா், சிலருடன் சோ்ந்து அசனமாப்பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு அவா் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு பைக்கில் பெருங்கட்டூா் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ராமச்சந்திரனை பின் தொடா்ந்து காரில் வந்தவா்கள், அவரை தடுத்து நிறுத்தி காரில் கடத்திச் சென்றனா்.

மேலும், கைப்பேசி மூலம் ராமச்சந்திரனின் தம்பியான ரவிச்சந்திரனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனா்.

இதன் பேரில் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

எதிரிகளை கைது செய்ய இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இதனிடையே, அந்தக் கும்பல் ராமச்சந்திரனை புதூா் பாலம் அருகே இறக்கி விட்டோம் எனத் தெரிவித்து விட்டு மாயமாகினா்.

இந்த நிலையில், இரு தனிப்படை போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடையவா்கள் எனக் கூறப்படும் ராணிப்பேட்டை மாவட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகான் ( 31), ரமேஷ் (37), சிறுகரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திர பிரசாத் (27), காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (24), விக்னேஷ் (24), காா் ஓட்டுநா் மோகன்ராஜ் (25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாரின் விசாரணையில் ராமச்சந்திரனுக்கும், பிரபாகரன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக தகராறு இருந்து வந்ததது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.