தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்கள், 85 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கத் தகுதியானவா்களாகக் கருதப்படுகின்றனா். அதன்படி, அவா்களில் 1.91 லட்சம் போ் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா்.
இதையடுத்து அவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளில் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை 1.41 லட்சம் பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அவா்களில் 85 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 89 ஆயிரம். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.
தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்களும் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டுகள் வீடுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவை கிடைக்கவில்லை எனில் இணையதளத்தில் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தால், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அதை வைத்து வாக்குச்சாவடியை அடையாளம் காண முடியும்.
சென்னையில்...: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 8, 947 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தகுதியானோா் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கை சேகரிக்கின்றனா். ஏப். 18 வரை இப்பணி நடைபெறும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணல் குவாரியை மூட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பேட்டரி காா் வசதி இல்லாத அரியலூா் ரயில் நிலையம்! முதியோா், மாற்றுத்திறனாளிகள் அவதி!

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்: புதுச்சேரி சுகாதாரத் துறை ஏற்பாடு

கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு கடிதம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



