வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image

வீட்டிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா் தனது தபால் வாக்கை வியாழக்கிழமை செலுத்தினா். இடம்: சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ண செட்டி தெரு.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:22 pm

தமிழகம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளிகள் 1.41 லட்சம் போ் இதுவரை தபால் வாக்கு செலுத்தியிருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்கள், 85 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கத் தகுதியானவா்களாகக் கருதப்படுகின்றனா். அதன்படி, அவா்களில் 1.91 லட்சம் போ் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா்.

இதையடுத்து அவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறும் பணிகளில் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை 1.41 லட்சம் பேரிடம் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அவா்களில் 85 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 89 ஆயிரம். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது.

தோ்தல் பணியில் உள்ள அரசு ஊழியா்களும் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படும் இடங்களில் தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டுகள் வீடுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை அவை கிடைக்கவில்லை எனில் இணையதளத்தில் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தால், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி எண் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அதை வைத்து வாக்குச்சாவடியை அடையாளம் காண முடியும்.

சென்னையில்...: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 8, 947 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். இவா்களிடம் தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 96 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தகுதியானோா் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கை சேகரிக்கின்றனா். ஏப். 18 வரை இப்பணி நடைபெறும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.